கால்பந்து அரசன் 'பீலே'


சாவோ பாவ்லோ: கால்பந்து விளையாட்டின் அரசன் பீலேவின் பெயரை போர்ச்சுகீஸ் (Portuguese) மொழி அகராதியில் பொருள்பட பெயரடையாக சேர்த்துள்ளது Michaelis Portuguese அகராதி. இது பிரேசில் நாட்டில் இருந்து வெளிவரும் அகராதியாகும். இதன் மூலம் உலகில் போர்ச்சுகீஸ் மொழியை பேசி வரும் 265 மில்லியன் மக்களுக்கு ‘பீலே’ அர்த்தமுள்ள சொல்லாக மாறியுள்ளது.

சுமார் 1,67,000 சொற்கள் அடங்கிய அந்த அகராதியில் பீலேவின் பெயரும் ஒன்றாக தற்போது இணைந்துள்ளது. பீலே என்றால் ‘அபூர்வமான, ஒப்பற்ற, தனித்துவமான’ என்ற பொருளை குறிப்பிடும் வகையில் அந்த அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பீலே என்றால் ‘தன் பணியில் சிறந்து விளங்கும் ஒருவரை’ குறிப்பிட்டு சொல்லி வருவதாகவும் பீலே அறக்கட்டளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 82-வது வயதில் பீலே காலமானார். இப்போதைக்கு ‘பீலே’ எனும் சொல் Michaelis Portuguese அகராதியின் ஆன்லைன் பதிப்பில் இடம்பெற்றுள்ளதாகவும். வரும் நாட்களில் அச்சு பிரதியில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.

பீலே பிரேசில் அணிக்காக 1957 முதல் 1971 வரை விளையாடி 92 போட்டிகளில் 77 கோல்களை பதிவு செய்துள்ளார். அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் சேர்த்து சுமார் 1,281 கோல்களை பதிவு செய்துள்ளார். ‘ஃபிஃபாவின் நூற்றாண்டுக்கான சிறந்த வீரர்’ என்ற விருதை மற்றொரு கால்பந்து ஜாம்பவானும், தனது நண்பருமான மரடோனாவுடன் பீலே பகிர்ந்து கொண்டார்.











 குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத்தொல்லையும் வயிற்று வலியும்:

குழந்தைகளின் செரிமான உறுப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைந்து இருக்காது. அதனால் அவர்கள் தாய்ப்பால் அல்லது பால் குடிக்கும் போது, சில குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை, வயிறு எரிச்சல், செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள் உப்புசம், அசவுகரியம், வயிறு வலி போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

எல்லா காலத்திற்குமான தீர்வு – உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர்: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உடனடித் தீர்வினைத் தருகிறது. கடந்த 170 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வரும் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர், தலைமுறை தலைமுறையாக கோடிக்கணக்கான தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.

அழும் குழந்தையின் அழுகையை நிறுத்தி அவர்களை சகஜமான நிலைக்கு மாற்றுவதற்கு கிரைப் வாட்டர் கொடுப்பது மிகச் சிறந்த வழிமுறையாகும். 170 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சதகுப்பை எண்ணெய் மற்றும் சர்ஜி காக்ஷரா (Sarjikakshara)ஆகியவற்றை கவனமுடன் சேர்த்து ஆயுர்வேத முறையில் உருவாக்கப்பட்ட கலவையே "கிரைப் வாட்டர்". இது குழந்தைகள், சிறுவர்களுக்கு வாயு, அமிலத்தன்மை, அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. சதகுப்பை எண்ணெய் வயிற்று வலியை குறைக்கும் என்று அறியப்படுகிறது. அதேபோல சர்ஜி காக்ஷரா வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது.

பொதுவாக நான்கில் ஒரு குழந்தைக்கு கோலிக் எனப்படும் வயிற்று வலி உண்டாகிறது. குழந்தைகளின் ஆரம்ப வருடங்களில் உண்டாகும் இந்த வலி அவர்கள் வளரும்போது தானாகவே சரியாகி விடும்.

வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சரியாக தூங்க முடியாமல், அதிக சோர்வுடன் காணப்படுவார்கள். அவர்களின் அழுகை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். ஒரு நாளில் மூன்று மணி நேரம் கூட நீடிக்கும், ஒரு குறிப்பிட்ட முறையில் மீண்டும் வலி வரும். கோலிக்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை வாரத்தில் மூன்று நாட்களுக்கு இதுபோன்ற அறிகுறியை வெளிப்படுத்துவார்கள். அதனால், நாம் முன்கூட்டியே அதனை அறிந்து கொள்ள முடியும். அழுகை நின்ற பிறகும், குழந்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யும், இதனால் குழந்தை தூங்க முடியாமல் தவிக்கும்

அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் எப்படி அனைவரின் வீட்டிலும் ஒரு அங்கமாக மாறியது என்பதை பற்றி அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி,"இந்தியாவில் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரின் பயணம், 1930-ம் ஆண்டு டிடிகே ஹெல்த் கேர் நிறுவனம் அதனை இங்கே இறக்குமதி செய்ததன் மூலம் தொடங்கியது. 100 சதவீதம் ஆயுர்வேத தயாரிப்பான உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர், குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாரால் ஏற்படும் வாயு, அமிலத்தன்மை போன்றவைகளை நீக்குகிறது.

மருத்துவ ஒழுங்குமுறை ஆணையங்கள் அனுமதித்தைவிட குறைவான அளவு பிரேசர்வ்டிவ்ஸ் தங்களின் பொருட்களில் இருப்பதை உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. ஆல்கஹால் என்பது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத ஒரு பொருள், உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் துளியும் இல்லை. இது பல்வேறு அமைப்புகளால் சோதனை செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளது.

கிரைப் வாட்டர் அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். கிரைப் வாட்டரில் கலந்துள்ள இயற்கையான உட்பொருள்கள் குழந்தையின் வயிற்று எரிச்சலுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

இதனால் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உலகிலுள்ள கோடிக்கணக்கான தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. குழந்தைகளின் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாக விளங்குகிறது.

இந்திய ரூபாயின் பணக் குறியீடு







    தேவநாகரி எழுத்து ர ( र ) மற்றும் ரோமானிய பெரிய எழுத்து R ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தியில் ரூபியா மற்றும் ஆங்கிலத்தில் ரூபாய் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளன.  எனவே இந்த சின்னம் இந்தியர்களுக்கும் சர்வதேச பயனர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.  மேலும் Shrio Rekha (The horizontal line of Devanagri Script ) வை குறிப்பதாகவும் உள்ளது ( र ).  இந்தியாவின் மூவண்ண கொடியைக் ( ₹ ) குறிப்பதாகும்.  மேலும் Arithmetic sign 'equal to' (சமமான) = வையும் குறிக்கிறது.

    


                                                                                                                                                                                                                                                                                                                                                          





                                       

                 

      

       

                                 

            

       

    2009 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு இந்திய வரவு செலவுத் திட்டக் கணக்கின் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு வேண்டும் என்பதை முன் மொழிந்தார்.  அக்குறியீடு இந்தியப்  பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்தப் போட்டியில் மொத்தம் 3331குறியீடுகள் பெறப்பட்டன.  இதிலிருந்து ஐந்து பேருடைய குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்பட்டது.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

    

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    











    இறுதியாக ஜுலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதி செய்யப்பட்டது.  இவரது முயற்சிக்காக 2,50,000 பரிசத் தொகையை வழங்கினார்.






    உதயகுமார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.  முன்னாள் திமுக எம்.எல்.ஏ N .தர்மலிங்கத்தின் மகன் ஆவார். 

















பட்டாம் பூச்சி விளைவு

     பட்டாம் பூச்சி விளைவு என்பது நேரியல் சாரா இயக்கம் (non - linear dynamics ) என்ற இயற்பியல் பிரிவினுள் உள்ள ஒழுங்கின்மை கோட்பாடு (chaos theory ) என்ற கருது கோளினை விளக்க உருவான ஒரு சிந்தனை ஆய்வு (thought experiment ) அல்லது ஒப்புமை விளக்கம் (analogy ) எனலாம்.

    இயற்பியல் அமைப்பில் நிகழும் ஒரு விளைவுக்கு ஒரு காரணி (தூண்டல்) இருக்கும்.

    எடுத்துக் காட்டாய், பால் காய்ச்சுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பாலின் வெப்பநிலை அடுப்பிலிருந்து வரும் வெப்ப ஆற்றலை பொருத்து இருக்கும்.  நிறைய வெப்ப ஆற்றலைக் கொடுத்தால் பாலின் வெப்பநிலை அதிகரிக்கும்.  குறைவான வெப்ப ஆற்றலைக் கொடுத்தால் பாலின் வெப்பநிலை குறையும்.  இதுவே தூண்டல் - துலங்கள் பண்பு.

    பாலின் வெப்பத்தையும் அடுப்பிலிருந்து வரும் வெப்ப ஆற்றலையும் ஒரு வரைபடமாக (graphplot ) வரைந்தால் அது கிட்டத்தட்ட ஒரு நேர்க்கோடாக இருக்கும்.

    இம்மாதிரியான அமைப்புகளைத்தான் நேரியல் சார் அமைப்பு என்கிறோம்.  இந்த நேரியல் அமைப்புகளில் விளைவு என்ன என்பதை காரணியின் அளவை மட்டுமே வைத்து ஊகித்துவிடலாம்.

    அதாவது இன்ன காரணத்தால் இன்ன விளைவு நடைபெற்றது என்று கூறிவிடலாம்.

    ஆனால் நேரியல் சாரா அமைப்பில் காரணி - விளைவு ஆகியவற்றின் இடையிலான தொடர்பு ஒரு எளிய நேர்க்கோட்டு வரைபடமாக இருக்காது!

    அதாவது இந்த அளவு காரணியால் இந்த அளவு விளைவுதான் ஏற்படும் என்பதை ஊகிக்க இயலாது!



    நேரியல் சாரா அமைப்புகளின் விளைவுகள் தொடக்க நிலை மதிப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களினால் பெரிய வேறுபாட்டிற்கு உள்ளாகும்.  எனவே இதனை ஒழுங்கின்மை (chaos) என்கிறோம்.

    இப்படித் தொடக்க நிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்தினால் பின்வரும் விளைவில் ஏற்படும் பெரிய வேறுபாட்டை விளக்கத்தான் 'பட்டாம்பூச்சி விளைவு' என்ற கருத்தாக்கம் கையாளப்படுகிறது.

    ஓரிடத்தில் உண்டாகும் புயல் எங்கோ எப்போதோ ஒரு சிறிய பட்டாம்பூச்சி தன்  சிறகுகளை அசைத்தன் விளைவாக இருக்கலாம் என்பதே இதன் கருதுகோள். அல்லது , அந்தப் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பின் காரணமாய் ஓரிடத்தில் ஏற்பட இருந்த புயல் ஏற்படாமலே போய்விட்டது என்று கொள்ளலாம்.  இதனால், பட்டாம் பூச்சிகள் புயலை உருவாக்குகின்றன என்பது பொருளல்ல  தொடக்க நிலையின் சிறிய வேறுபாடுகள் பின்வரும் விளைவில் பெரிய வேறுபாடுகளாக அமையும் என்பதே இதன் கருத்து!

    ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Norton Lorenz 1963 இல், இதை 

    "பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஓர் வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்கிறார் .

    இக்கருத்தை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின் படியும் சரியென்று நிறுவிக் காட்டினார்.  இதன் காரணமாக உருவான தத்துவமே 'வண்ணத்துப்பூச்சி விளைவு' என்கின்ற Butterfly Effect .

    இதை எவ்வாறு கண்டறிந்தார் எனில் இவர் ஒரு வானியியலாளர்.  வானிலையை கணிப்பதற்காக ஒரு Simulation tool கண்டறிந்தார்.  இதுவரை நடந்த காலநிலை மாற்றங்களை வைத்து அடுத்த 2 மாதங்களுக்கான காலநிலையைக் கண்டறிந்தார். முதலில் அனைத்தும் நன்றாகவே இருந்தது.  பிறகு மீண்டும் value களை Insert செய்துவிட்டு 2 மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது மிகப்பெரிய சூறாவளி வரும் என்பதை அறிந்தார்.  இது எவ்வாறு நடக்க இயலும் என்று சிந்தித்தார்.  பிறகுதான் கண்டறிந்தார் அவர் முதலில் கொடுத்த value 0.506 ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட value 0.506.127 என்பதாகும்.  அந்த 0.000.127 என்கின்ற அளவு மிகப் பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தார்.  இதன் மூலமாக அவர் Butterfly Effect  - ஐ கண்டறிந்தார்.

எடுத்துக்காட்டாக:

    1. 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி த்ரிஷாவிடம் நீ படித்த கல்லூரிக்கு  உன்னைத் தேடி நான் வந்தேன். ஒரு பெண்ணிடம் என் பெயரைச் சொல்லி உன்னிடம் சொல்லச் சொன்னேன். நீ என்னைப் பார்க்க விருப்பமில்லை என்று திட்டியதாகக் கூறினார்.  நானும் அதை நம்பி அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என்று கூறுவார்.

    உடனே த்ரிஷா வியப்போடு பதில் கூறாமல் அழுதுகொண்டே தன் அறைக்கு சென்று விடுவார்.  விஜய் சேதுபதியும் பின் தொடர்ந்து செல்வார்.

    தன்னை சமாதானப் படுத்திக்கொண்டு அன்று கல்லூரியில் நடந்ததைத் தெளிவு படுத்துவார் த்ரிஷா.  அந்த பெண் உன் பெயரைச் சொல்லவில்லை.  நானும் என்னைப் பின் தொடர்ந்து வரும் வேறொரு நபர் என எண்ணி திட்டி அனுப்பிவிட்டேன் என அழுது கொண்டே விஜய் சேதுபதியிடம் கூறுவார்.

    இந்த கதையில் ராமச்சந்திரன் என்னும் பெயர் நியாபகத்திற்கு வராமல் போனது மறதி என்னும் காரணி. அந்த காரணியின் விளைவு இவர்கள் பிரிய நேரிட்டது. அந்த பெண் பெயரை சொல்லாமல் மறந்த ஒரு சின்ன செயல் இவர்கள் பிரிய வேண்டும் என்ற பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது.

    2. ஆஸ்திரியா நாடு கலைகளுக்கு புகழ் பெற்ற நாடு.  வியன்னா நகரில் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ் (Academy of Fine Arts ) - இல் bohemian arts பயில ஒரு மாணவன் விண்ணப்பம் செய்தான்.  துரதிஷ்ட வசமாக அவனுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.  மறுமுறை விண்ணப்பித்தப் போதும் நிராகரிக்கப்பட்டது.

    இதன் விளைவாக பின்னாளில் அந்த நாட்டுக்கு வரவிருந்த அழிவு தெரிந்திருந்தால் அந்த மாணவனின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த பேராசிரியர் அதை நிராகரித்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

    அதனால் மனமுடைந்த அந்த மாணவன் தான் கலைஞன் ஆக வேண்டும் என்ற கனவை விடுத்து ஜெர்மன் ராணுவத்தில் படைவீரனாக சேர்ந்தான். அந்த மாணவன் அடால்ப் ஹிட்லரால் உலகம் எத்தகைய பேரழிவைச் சந்தித்தது என்பது அனைவரும் அறிவர்.

    இதில் ஹிட்லர் பொஹெமிய கலைஞராக ஆகியிருந்தால், ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்திருக்க மாட்டார். ராணுவத்தில் சேராதிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்திருக்காது.

    உலகம், வாழ்க்கை, அறிவியல் என நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் ஒரு சிக்கலான நேரியல் அல்லாத அமைப்பு (Non - Linear system ).  அதில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம் கூட அந்த அமைப்பை வெகுவாக பாதிக்கும்.

    3. ஆயிரத்தோர் இரவு கதைகள் என்ற அரேபிய கதை ஒன்றை நீங்கள் அறிந்திருக்கலாம்.  

    இந்த கதை உருவாகக் காரணம் என்ன தெரியுமா?

    ஒரு அரேபிய மன்னன் தன் மனைவியால் ஏமாற்றப் படுகிறான்.  அதற்குப் பிறகு தன் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணாக மணம் செய்து கொண்டு மறுநாள் காலை அந்தப் பெண்களை கொலை செய்து விடுகிறான்.  அப்படி ஒரு நாள் அந்நாட்டு மந்திரியின் மகளை மணம் செய்கிறான் அரசன்.  அவள் மன்னனைத் திருத்தும் பொருட்டு ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையைச் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சிக்கிறாள்.  இப்படியாக ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் சொல்வதாக உருவானது அக்கதை.

    இங்கு இந்த ஆயிரத்தொரு இரவுகள் உருவாவதற்கு காரணம் - மன்னனின் மனைவி அவரை ஏமாற்றியதுதான்.

    இவ்வாறு எங்கோ எப்பொழுதோ நடக்கும் ஒன்று வேறொரு இடத்தில் நடக்கும் செயலுக்கு காரணமாக அமைந்தால் அதுவே பட்டர்பிளை எபெக்ட்.

    ஒரு சிறிய நிகழ்வினால் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வே பட்டாம் பூச்சி நிகழ்வு ஆகும்.  

காஸ் (Gauss)

      



     கார்ல் பிரெட்ரிச் காஸ் என்பவர் 1777 ஆம் ஆண்டு பிரன்ஸ்விக் (Brunswick) என்னும் ஊரில் பிறந்தார்.  இவரின் தந்தை கெப்ஹார் காஸ் (Gabhard Gauss) இவரின் தாய் டெரோதியா பென்ஸ் (Dorothea Benze) ஆவார்.  காஸின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி.  தன் தந்தையின் கணக்கிடும் திறனில் இருந்த தவற்றை காஸ் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போதே திருத்தினார்.  காஸ் தன்  புத்திக் கூர்மையை தன் தாயிடமே பெற்றதாக கூறினார்.

     1784 ஆம் ஆண்டு இவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  இவருடைய ஆசிரியர் புட்னர்(Buttnner) மாணாக்கரைச் செயல்பட வைப்பதற்காக 1 முதல் 100 வரை கூட்டுத் தொகையைக் காணச் சொன்னார்.  அதிக நேரம் ஆகும் என்று ஆசிரியர் இருந்தபோது, காஸ் உடனே விடை கூறிவிட்டார்.  அதற்கான விளக்கத்தையும் தந்தார்.  1+100 =101, 2+99=101, எனவே 50*101=5050 என்று கூறினார்.  இவர் திறமைகளைக் கண்டு இவருக்காக சில புத்தகங்களை வரவழைத்தார்.  ஆசிரியரின் உதவியாளரான மார்டின் பார்ட்ல்சும் காசிடம் தனி கவனம் செலுத்தினார்.  பார்ட்ல்சும் கணித வல்லுநர்.  இவர் காசன் (Kazan) பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார்.

     காஸ் 1788இல் இடைநிலைக் கல்வி பயில, பள்ளியில் சேர்ந்தார்.  1791இல் அவருக்கு அரசின் படிப்பு உதவித் தொகை கிடைத்தது.  இடைநிலைக் கல்வியில் சிறந்து   விளங்கியமையால் காஸ் 'Collegium Carolinum) என்ற நிறுவனத்தில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.  1792 முதல் 1795 வரை காஸ், நியூட்டன், யூலர் ,லெக்ரான்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளைப் படித்தறிந்தார் .

ஆராய்ச்சி 

     இவர் கூட்டு, பெருக்கல் சராசரியில் (Arithmetic Geometric Mean) நிறைய ஆராய்ச்சிகள் செய்தார்.  காஸ் பிரன்ஸ்விக்கிலிரு கோட்டின் ஜென் சென்றார்.  அங்கு உள்ள நூலகம் அவருக்கு மிகவும் பயன்பட்டது.  அங்கு ஒழுங்கு பல கோணத்தின் அமைப்பு பற்றியும் (construction of regular polygon ) இயற்கணித அடிப்படை தேற்றத்தின் நிரூபணம் ஆகியவற்றையும் கண்டுபிடித்தார் .

    காஸ் 1798-ல் பிரன்ஸ்பர்க் திரும்பினார்.  1807 வரை அங்கு இருந்தார்.  1798இல், 21 வயதிலேயே சிறந்த ஒரு நூலை எழுதி முடித்தார்.  ஆனால் அது 1801 இல் தான் வெளியிடப்பட்டது.  இது மாபெரும்  படைப்பாகும்.

    1799 இல் டாக்டர் பட்டம் பெற்றார்.  1807 இல் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் கனிதப் பேராசிரியராகவும் காட்டிங்கன் வானியல் ஆய்வுக் கூடத்தின் இயக்குனராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.  பல கணித புத்தகங்களை எழுதியுள்ளார்.

    பிற்காலங்களில் காஸ் கணிதத்தின் அனைத்து பிரிவுகளிலும் திறமையை நிரூபித்தார்.  குறிப்பாக convergence என்ற குவிதல் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர் ஆவார்.

கணிதச் சாதனைகள்    

    இவர் சாதனைகள் எண்ணிலடங்கா.  சில உதாரணங்கள் காண்போம்:

  1. 1796 இல் குறிப்பிட்டப்  பல்கோணங்களை காம்பஸ் மற்றும் அளவு கோல் கொண்டு வரையும் முறையைக் கண்டுபிடித்தார்.  இத்தகைய கணக்குகள் பழமையான  கிரேக்கர் காலம் முதல் முயற்சி செய்யப்பட்ட ஒன்று.
  2. 17 பக்கப் பல கோணத்தை அமைத்துக் காட்டினார்.
  3. எண்ணியலில் பல புதுமைகளைக் கண்டுபிடித்தார்.
  4. பகா  எண் தேற்றத்தை அனுமானித்தார்.
  5. எந்த ஒரு நேர் முழுவும் அதிகபட்சமாக மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் காட்டலாம் என்று கண்டு பிடித்து, தன் நாட்குறிப்பில் எழுதி மகிழ்ந்தார்.
  6. வான இயலில் பல கண்டுபிடிப்புகளுக்கு உதவி, காட்டிங்கன் வானாய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்(1807).
  7. யூக்ளிடியன் அல்லாத வடிவியலைக் கண்டுணர்ந்து, அதை வெளியிடாததால் பொல்யாய் (J .Bolyai) என்பவர் இதைக் கண்டுபிடித்து 1829இல் அறிவித்தார்.  எனினும் இதற்கு முன்னரே காஸ் இதைப்பற்றி  அறிந்திருந்தார்.
  8. புவிப் பரப்பு பற்றிய நில அளவையை (Geodesic Survey ) செய்தார்.  இது கணிதத்தின் ஒரு பிரிவாகும்.  அதன் அடிப்படையில் வகை வடிவியலை உருவாக்கினார்.
  9. வெபர் (W .Weber) என்ற இயற்பியல் பேராசிரியருடன் சேர்ந்து காந்த இயல் பற்றிய ஆராய்ச்சிகள் செய்தார்.
  10. இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்திற்கு நிரூபணம் கண்டறிந்தார்.
  11. கலப்பு எண் அல்லது சிக்கல் எண்  முறையைக் கண்டுபிடித்தார். √-1 என்பதற்கு i -ஐப் பயன்படுத்தினார்.
  12. இயல்நிலைப் பரவல் வளைவு (Normal distribution curve )  இவர் பெயராலேயே அழைக்கப் படுகிறது.  இது பற்றி ஆராய்ந்து விளக்கியவர் இவர்.

சிறப்புகள் 

    பணத்தாள்களில் இவர் உருவம், இயல்பரவல் படம் ஆகியவை இடம் பெற்றன.
    இவரைப் பெருமைப்படுத்த மூன்று தபால்தலைகளை வெளியிட்டுள்ளனர்.  வால்ஹல்லா கோயிலில் இவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

பிதாகரஸ்

      



     போதுமான வசதி வாய்ப்புகளற்றக் காலத்தில் மேதைகள் எவ்வாறு சீரிய கணிதக் கருத்துக்களை உருவாக்கினர் என்று உணர வேண்டும்.  'நாமும் புதியன கண்டுபிடிக்க வேண்டும்' என்னும் துடிப்பு மாணவரிடம் உருவாக வேண்டும்.  இதனால் கணிதத்தின் அமைப்பும், விந்தையான கருத்துகளும், புதியன படைக்கும் ஆற்றலும், ஆர்வமும் மாணாக்கர் மனத்தில் பதிய வேண்டுமாயின் பாடத்துடன் கணித வரலாற்றையும் இணைத்துக் கற்பிப்பது அவசியம்.

     இன்றைய நவீன அறிவியல் உலகில் கணிதம் கொண்டுள்ள சிறப்பான நிலைக்கும் காலந்தொட்டு அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பல கணித மேதைகள் காரணமாவர்.  அவர்களுள் ஒரு அயல்நாட்டு கணித மேதையான பிதாகரஸ் அவர்களைப்  பற்றி காண்போம்.

பிதாகரஸ்:

     இவர்   ஒரு கிரேக்க கணித மேதை.  பிதாகரஸின் தந்தை நிசார்சஸ், தாய் பிதாயஸ்.  இவர் தாயாரின் சொந்த ஊர் சமோஸ்.  பிதாகரஸின் தந்தை ஒரு வியாபாரி.  பிதாகரஸ் தன் குழந்தைப் பருவத்தில் வியாபார நிமித்தமாக அடிக்கடி தந்தையுடன் வெளியில் செல்வார். பிதாகரஸ் படிப்பதில் திறமையானவர்.  இவர் பாடல் எழுதுவதிலும், பாடுவதிலும் புலமை மிக்கவர்.  இவர் இவர் எண்களின் தந்தை எனவும் கூறப்படுவார்.

     இவர், இவருடைய மூன்று தத்துவ ஆசிரியர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.  அம்மூவரில் முக்கியமானவர் பெரிகைட்ஸ் (Pharekydes) ஆவார்.  மற்றவர் தேலஸ் (Thales), அனாக்சிமேடர்(Anaximader) ஆவார். பிதாகரஸ்,தன் 18ஆம் வயதில் தேலஸைச் சந்தித்தார்.  அவரை எகிப்து நாட்டிற்குச் சென்று மேலும் சில கணிதக் கருத்துகளைக் கற்கும்படிக் கூறினார். இந்தியாவுக்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

     கி.மு. 535இல் பிதாகரஸ் எகிப்து சென்றார்.  கி.மு.525இல் எகிப்தின் மீது பெர்சிய மன்னர் படையெடுத்தார்.  பிதாகரஸை ஒரு கைதியாக எண்ணி பாபிலோனுக்கு அனுப்பினார்.  கி.மு. 520இல் பிதாகரஸ் பாபிலோனை விட்டு வெளியேறி சமோசுக்கு  சென்றார்.  அங்கு ஒரு பள்ளியை (The Semi Circle) நிறுவினார்.  இப்பள்ளி பாடம் கற்பிப்பதோடு அடிக்கடி அரசியல் கூட்டம் நிகழும் இடமாகவும் அமைந்தது.  கி. மு. 518 இல் பிதாகரஸ் சமோசுவை விட்டு தென் இத்தாலிக்கு சென்றார்.  பிதாகரஸ் ஒரு மதம் மற்றும் தத்துவம் சார்ந்த பள்ளி நிறுவினார்.  அப்பள்ளியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர்.

     பிதாகரஸ் இசையில் கணித கோட்பாடுகள் பற்றி (Mathematical Theory of Music ) அதிக கவனம் செலுத்தினார்.  அவர் சிறந்த இசை மேதை.  இசை நிகழ்ச்சி மூலம் வரும் பணத்தை உடல்நலம் குன்றியவருக்கு உதவ பயன்படுத்தினார்.

ஆராய்ச்சி 

  • பிதாகரஸ் எண்களின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.  ஒற்றை எண்கள், இரட்டை எண்கள், முக்கோண எண்கள்,செவ்விய எண்கள் (Perfect Numbers ) பற்றி  ஆராய்ந்தார்.  எண்கள் மாயாஜாலம் வாய்ந்தவை.  நன்மை  அல்லது தீங்கு செய்யக்கூடிய தெய்வசக்தி வாய்ந்தவை என எண்ணினார்.ஒவ்வோர் எண்ணிற்கும் வெவ்வேறு ஆற்றல் இருப்பதாக எண்ணினார்.
  • ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் மீது வரையப்பட்ட சதுரத்தின் பரப்பளவானது, பிற இரு பக்கங்களின் மீது வரையப்பட்ட சதுரங்களின் கூடுதல் பரப்பளவுக்குச் சமம் என்னும் தேற்றத்தை தெரிவித்து தருக்க முறையில் நிரூபித்தும் காட்டிய முதல் கணித மேதையாவார்.  நம் இந்திய வல்லுநர்களுக்கு இந்தத் தேற்ற உண்மை தெரியும்.  ஆனால் நிரூபித்துக் காட்டவில்லை.
  • இது புகழ் பெற்ற தேற்றம் ஆகும்.  உலகில் இது நாள் வரை பல கலைகளில் (கட்டிடக்கலை, ஓவியக்கலை, மற்றும் வடிவியல்)  மிக மிக பயனுடையதாயிருக்கிறது.
  • பிதாகரஸ் முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் இரு செங்கோணங்களுக்கு சமம் என்று கண்டறிந்தார்.  இதையே பொதுமைப்படுத்தி n  பக்கமுள்ள பலகோணத்தின் உட் கோணங்களின் கூடுதல் 2n -4 செங்கோணம் என்றும், வெளி கோணங்களின்  கூடுதல் 4 செங்கோணங்கள் என்றும் கூறினார்.
     இவர் குரோட்டன் சங்கம் (society at croton ) என்ற கணிதக் கழகத்தினை  உருவாக்கினார்.  இதில் உள்ள உறுப்பினர்களை Pythagoreans  அதாவது பிதாகரஸ் வழித் தோன்றல்கள் என்று அழைத்தனர்.

     கி.மு. 513இல் இவர் டெலோஸ் (Delos) சென்று தன் பழைய ஆசிரியர் பெரிகைட்சுக்கு பணிவிடை செய்தார்.  ஆசிரியர் இறக்கும் தருவாயில் ஆசிரியருடன்  பணிபுரிந்தார்.  தன் ஆசிரியர் இறந்த பிறகு மீண்டும் குரோட்டன் வந்தார். கி.மு. 510 இல் குரோட்டன் (Croton) இல் இருந்தவர்களால் சிபேரிஸ் (Sybaris) தாக்கப்பட்டது.  பிதாகரஸ் மெடா பொண்டியம்  தப்பி சென்றார்.  குரோட்டனில் பிறந்த சைலோன் (Cylon) தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்.  அவர் பிதாகரசுடன் இணைந்து கணிதக் கழகத்தில் பணியாற்ற விரும்பினார்.  அவரின் தீவிரவாத செயல் பிடிக்காததால் பிதாகரஸ் அவரைச் சேர்க்கவில்லை.  இதனால் கோபம் கொண்ட சைலோன் கணிதக் கழகத்தை இடித்தார்.

     இவர் மெடா பொண்டியத்தில் (Meta Pontium) 90 வயதில் இறந்ததாக கூறப்படுகிறது.  இவர் கழகம் இடிக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவருடைய சாதனைகள் 

  • ஒற்றை எண்கள் (1,3,5,7,..) இரட்டை எண்கள் (0,2,4,6,...) ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார்.
  • நிறைவு எண் அல்லது முற்றெண் (Perfect  Number) என்னும் ஒரு புதிய எண் தொடரைக் கண்டு பிடித்தார்.
           i )  6=1+2+3    6இன் வகு எண்கள் 1,2,3,6

          ii ) 28=1+2+4+7+14     28இன் வகு எண்கள் 1,2,4,7,14,28
  • எண்களின் மதிப்புகளை, புள்ளிகளின் எண்ணிக்கையால் , வடிவியல் முறையில் சீர் அமைப்பு முறையில் அமைத்து அவற்றின் கூடுதலை எளிதில் அறியும் வழி வகுத்தார்.
              அக்காலத்தில் இயல் எண் கணிதம் உருவாகவில்லை.  எனவே சுருக்கமான சூத்திரங்களுக்குப் பதிலாக, நீண்ட குழப்பமான வடிவியல் விளக்கம் கொடுத்தார்.




3. அடுத்தடுத்த இரட்டை முழு எண்கள், செவ்வக எண்களாகும்.
        2,4,6,8,10,12

     வாழ்க்கையின் அடிப்படை எண்கள் எனக் கருதினார்.  உடல்நலம் வாதம்,பித்தம் போன்ற பொருள்களின் விகிதத்தைப் பொறுத்துள்ளது என்றார் .  இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் அவரது ஆராய்ச்சிகளும் மதிநுட்பமும் அறியப்பட்டன.  அவருக்கு ரோமாபுரி நகரத்தில் சிலை ஒன்று எழுப்பி கவுரவித்தார்கள் .

 

சர்வதேச பொதுமன்னிப்பு(Amnesty International)

 


தோற்றம்:

     1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு போர்ச்சுக்கீசிய மாணவர்கள் லிஸ்பன் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டனர் என்ற செய்தியை பென்பன் செய்தித்தாள்களில் படித்தார்.  அவர்கள் செய்த குற்றம் விருந்து கேளிக்கையில் ஈடுபட்டதே ஆகும். இது குறித்து போர்ச்சுக்கீசிய அரசுக்கு பென்பன் பல கடிதங்கள் எழுதி இந்த மாணவர்களின் விடுதலைக்கு முயன்றார்.  ஆனால் பயனில்லை.  1961-ல் பென்பன் "பொது மன்னிப்புக்கான விண்ணப்பம்" என்ற ஒரு வருட கால இயக்கத்தை எரிக்பேக்கர் மற்றும் லூயிக் கூப்பருடன் சேர்ந்து தொடங்கினார்கள்.  பீட்டர் பென்சன் ஒரு வழக்கறிஞர்.  அவர் 'லண்டன் அப்சர்வர்' என்ற பத்திரிகையில் "எட்டு கைதிகளின் துயரம் என்ற கட்டுரையை வெளியிட்டு பேரும் புகழும், நிதியும், ஆதரவும் பெற்றார்.  பின்பே சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனத்தை   உருவாக்கினார்.  156 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு இனங்களைச் சார்ந்த பள்ளி சிறுவன் முதல் தள்ளாடும் முதியவர் வரை பல்லாயிரக்கணக்கானவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 42க்  கூட்டுக்குழுக்களாக இந்த அமைப்பு செயல்படுகிறது.

சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனத்தின் நோக்கம் 

1.  "மனசாட்சிக்  கைதிகளை விடுவிப்பது - (மனசாட்சி கைதிகள் என்பவர் அரசியல் / சமய நம்பிக்கைகளை தனது விருப்பம் போல் பின்பற்றியதற்காகவும் , எந்த வகையிலும் வன்முறையில்  ஈடுபடாமலும் / தூண்டாமலும், தங்களது இன , நிற மற்றும் மொழிப்பற்றில் நம்பிக்கை கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள்.)

2.     சிறைச்சாலை இறப்புகள் , மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுதல், பெண் கைதிகளைக் கொடுமைக்கு உள்ளாக்குதல், சிறையிலிருந்து காணாமல் போதல், மரண தண்டனை விதித்தல் ஆகியவற்றை எதிர்த்தல்.

3.     அரசியல் கைதிகளுக்கு விரைவான விசாரணையின் மூலம் தீர்ப்பு வழங்குதல்.

4.  'தங்கள் நம்பிக்கையை பின்பற்றுவதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்படாத ஒரு உலகத்தை ஏற்படுத்துதல்.

உறுப்பினர்கள் 

     உலகெங்கும்  இந்த நிறுவனத்திற்கு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மருத்துவர்கள், பள்ளி மாணவர்கள், வயதில் மூத்தவர்கள், தொழிற்சங்கவாதிகள் , புகழ் பெற்றவர்கள், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்கள் பெண் உரிமை பற்றி பேசும் வீராங்கணைகள் , ஆசிரியர்கள் மற்றும் பலர்.

தலைமையகம் 

     இந்நிறுவனத்தின்  தலைமையகம் லண்டனில் உள்ளது.  இதில் 45 நாடுகளைச் சேர்ந்த இதன் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பிரதிநிதிகளை பன்னாட்டு சபை கூட்டத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.  இந்த பன்னாட்டு சபையே கொள்கை முடிவுகளையும் செயல் திட்டங்களையும் வகுக்கும்.  இதன் செயற் குழு ஆண்டுக்கு 4 முறை கூடி நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராயும்.

பணிகள் 

    இதில் பணிகளை ஆற்றுவதற்குத் தன்னிச்சையான ஆர்வலர்படை செயல்படுகிறது.

1)     முதல் கட்டப் பணி சரியான தகவல்களைத் திரட்டுவதாகும்.

2)     அதிகாரப்பூர்வமான தகவல்களை ஆராய்வது 

3)     நாட்டுக்கு குழுக்களை அனுப்புவது / வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வழக்கறிஞர்களை அனுப்புவது.

4)     சாட்சிகளை பேட்டி காண்பது 

சின்னம் 

முள்வேலிக்குள் காணப்படும் மெழுகுவர்த்தியே இந்நிறுவனத்தின் சின்னமாகும்.  "இருளை நிந்திப்பதை விட விளக்கை ஏற்றுவது நல்லது' என்ற பழமொழிக்கேற்ப இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதில் மெழுகுவர்த்தி சிறையில் வாடும் கைதிகளைக் குறிக்கிறது.

வழங்கப்பட்ட விருதுகள் 

  • மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆற்றிய பணிக்காக 1977 -ல் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • சிறப்பாக சேவை புரிந்ததற்காக 1978 -ல் ஐ.நா. சபையின் மனித உரிமை பரிசும் வழங்கப்பட்டது.

ஆண்டறிக்கை 

     நூறு நாடுகளைப் பற்றிய செய்திகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கை ஆனது ஆங்கிலம், அராபிக் ,பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளில் வெளியிடப்படுகின்றன.